×

தவறான சிகிச்சையால் முகம் பாதிப்பு டாக்டரிடம் ₹1 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ரைசா நோட்டீஸ்

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் வசித்துவரும் நடிகையும், மாடல் அழகியுமான ரைசா வில்சன், முகப்பொலிவு சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள ஒரு தனியார்  சிகிச்சை மையத்தை அணுகியுள்ளார். அங்கிருந்த டாக்டரின் உத்தரவாதத்தின் அடிப்படையில் மார்ச் 25ம் தேதி போடாக்ஸ் சிகிச்சையை ரைசா எடுத்துக்கொண்டு, அதற்கு கட்டணமாக 62 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தியுள்ளார். பத்து நாட்களுக்கு பிறகும் எவ்வித முன்னேற்றமும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்த ரைசா, மீண்டும் டாக்டரை அணுகியபோது, டெர்மா பில்லர்ஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. முதல் தடவையே ஏன் இந்த சிகிச்சை அளிக்கவில்லை என்றும், பணம் பறிப்பதுதான் நோக்கமா என்றும் ரைசா கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் ஏப்ரல் 16ம் தேதி ஆலோசனைக்கு பிறகு ஏப்ரல் 17ம் தேதியே டியர் ஃப்ரீ ஃபில்லர் சிகிச்சையை அந்த டாக்டர் அளித்துள்ளார். அதற்காக 65 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தியுள்ளார்.

சிகிச்சைக்கு பின்னர் ரைசாவின் வலது கண் மற்றும் கன்னத்திலிருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன், முகமும் வீங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த டாக்டர் அளித்த தவறான சிகிச்சையே காரணம் என குற்றம்சாட்டி, வீங்கிய முகத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தவறான சிகிச்சையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஈடாக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும் அந்த தொகையை 15 நாட்களுக்குள் தரவில்லை என்றால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் அந்த டாக்டருக்கு நடிகை ரைசா வில்சன் தனது வக்கீல் ஜி.ஹரிஹர அருண் சோமசங்கர் மூலம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Tags : Raisa , Improper treatment, face, vulnerability, actress Raisa, notice
× RELATED நீலகிரியில் மழையால் எவ்வித பெரிய பாதிப்பும் இல்லை: ஆ.ராசா பேட்டி