தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தியை ஆதரித்து கல்மண்டபம் காவல்நிலையம் அருகே திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு கொள்ளை அடித்து வருகிறது. இந்த ஆட்சியை அகற்ற இறுதிக்கட்ட நாள் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவின்போது நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக் களியுங்கள். ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் மூர்த்தியை வெற்றிபெற செய்யுங்கள். எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக வரவில்லை.
சசிகலா காலில் விழுந்து முதலமைச்சராக வந்தார். பின்னர் சசிகலாவின் காலை வாரியவர்தான் அவர். தற்போது மோடி காலில் விழுந்து கிடக்கிறார்கள். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவதாக கூறி மோடி அடிக்கல் நாட்டினார்.செங்கல் மட்டும் தான் வைக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் ராயபுரம் தொகுதியில் திமுக 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதுபோல் மீண்டும் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.