×

மக்களின் குறை தீர்க்க பாடுபடுவேன்: ஐட்ரீம்ஸ் மூர்த்தி உறுதி

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் ஐட்ரீம் இரா.மூர்த்தி நேற்று வண்ணாரப்பேட்டை பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், ‘திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை மக்களுக்கு பெற்று தருவேன். ராயபுரம் மார்க்கெட் பகுதியில் வியாபாரிகள் சாலை ஓரத்தில் கடைகள் போடுகிறார்கள். அவர்களுக்கு கடைகள் கட்டிக்கொடுக்க ஏற்பாடு செய்வேன். குடிநீர், கழிவுநீர் பிரச்னை தீர்த்து வைப்பேன். நான் இதே தொகுதியை சேர்ந்தவன். வெற்றி பெற்றால் இதே தொகுதியில் தான் வசிப்பேன்.

எப்போது வேண்டுமானாலும் என்னிடம் உங்கள் குறைகளை தெரிவிக்கலாம். தொகுதியில் இல்லாதவருக்கு வாக்களிப்பதை விட தொகுதியை சேர்ந்த எனக்கு வாக்களித்தால், மக்களின் குறை தீர்க்க பாடுபடுவேன். இந்த பகுதியில் சமுதாயக்கூடம், பூங்கா, விளையாட்டு திடல் ஆகியவை அமைத்து தருவேன். ராயபுரம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார். ராயபுரம் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, பகுதி செயலாளர்கள் வ.பே.சுரேஷ், செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

Tags : Moorthy , Will work to resolve people's grievances: Idreams Murthy committed
× RELATED புழல் ஏரிக்கு எந்த பாதிப்பும் இல்லை,...