புதுச்சேரி: ஊரடங்கு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை; அதற்கான தேவை தற்போது இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் கொரோனா கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் தான் உள்ளது என குறிப்பிட்டார்.