ராமநாதபுரம் தொகுதி பாஜ வேட்பாளர் குப்புராமுவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர் நடிகை நமீதா, அவரது கணவர் வீரேந்திர சவுத்ரியும் வந்தனர். பிரசாரம் தொடங்கி, ஒன்றரை மணிநேரம் ஆகியும் வேட்பாளர் வரவில்லை. இதனால் அப்செட் ஆன நமீதா, இடையிலேயே பிரசாரத்தை முடித்துக்கொண்டு கோபமடைந்து தங்கியிருந்த விடுதிக்கு திரும்பினார். உடன் வந்த பாஜ நிர்வாகிகள், இங்கு வேட்பாளர் வராததால் ராமநாதபுரத்தில் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய வேண்டும் என கேட்டனர். அதற்கு நமீதாவின் கணவர், கட்சியினரை பார்த்து கையெடுத்து கும்பிட்டு, ‘‘வேட்பாளர் இல்லாமல் பிரசாரம் செய்ய முடியாது. வந்த வேலை முடிந்தது. எங்களுக்கு அடுத்தடுத்து வேலை இருக்கிறது’’ எனறு காட்டமாக தெரிவித்தார். இதனால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.