×

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,04,548-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 5 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,225-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 8,88,508 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 8,815 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Andra , In Andhra Pradesh, 1,288 people have been diagnosed with corona infection in the last 24 hours
× RELATED தெலங்கானா முதல்வராக ரேவந்த்ரெட்டி...