×

ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம்: பரந்தாமன் வாக்குறுதி

சென்னை: எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் நேற்று காலை தொகுதிக்குட்பட்ட பி.கே.பூங்காவில் நடைபயிற்சி செய்த மக்களிடம், தொகுதியின் பிரச்னை குறித்து பேசினார். அப்போது திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தவுடன், தொகுதிக்கு தேவையான அனைத்தும் செய்வேன், என்றார். பூங்காவில் இருந்த முதல் தலைமுறை வாக்காளர்களிடம், இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு முகாம், உடற்பயிற்சி கூடங்கள் என அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். முன்பெல்லாம் தொகுதிகளில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தான் இருக்கும். ஆனால், நான் தொகுதி முழுவதும் பல அலுவலகங்கள் அமைக்க உள்ளேன். அங்கு மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்த உடன் தீர்வு காணப்படும்,’ என்றார்.

மேலும், புளியந்தோப்பு பகுதியில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வாக்கு சேகரித்தார். அப்போது, மக்கள் இங்கு கழிவுநீர் பிரச்னை நீண்ட காலமாக உள்ளது, என்றனர். அதைகேட்ட பரந்தாமன் நான் வெற்றிபெற்றதும், கண்டிப்பாக கழிவுநீர் பிரச்னையை தீர்ப்பேன், என்றார். மாலையில், 78வது வட்டம் அங்காள அம்மன் கோயில் அருகே உள்ள பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது மக்களிடம் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், கழிவுநீர் கலக்காத குடிநீர், போக்குவரத்து நெரிசல் சரிசெய்து தரப்படும், புதிய மின் மாற்றிகள் அமைக்கப்படும், என பல நல்ல திட்டங்கள் தொகுதி மக்களுக்கு செய்வேன், என்றார்.

Tags : Barandaman , Housing scheme for the poor: Barandaman's promise
× RELATED பொதுமக்கள் வசதிக்காக சூளை வழியாக...