×

மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்: பரந்தாமன் பிரசாரம்

சென்னை: எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் நேற்று முன்தினம் சேத்துபட்டு 107வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதி மக்கள் தங்களின் கோரிக்கைகளை பரந்தாமனிடம் தெரிவித்தனர். அதை கேட்ட அவர், உங்களின் வாழ்வாதரம் வளர்ச்சியடைய உழைப்பேன், அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும். திமுகதான் ஆளும் கட்சியாக வரப்போகிறது. உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்க்கப்படும், என்றார்.

தொடர்ந்து நேற்று காலை 6 மணியளவில் மக்கள் நடைபயிற்சியில் ஈடுபடும் சேத்துபட்டு எம்.சி.சி பள்ளி மைதானம், இகோ பூங்காவில் மக்களிடம் பிரசாரம் செய்தார். அப்போது நடைபயிற்சி மேற்கெண்டவர்களிடம் இந்த தொகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், நீங்கள் வைத்துள்ள கோரிக்கைகள் கண்டிப்பாக நிரைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘இது என்னுடைய சொந்த தொகுதி. இங்குள்ள மக்களின் வாழ்வியலும், அவர்களின் தேவைகளும் எனக்கு நன்றாக தெரியும். எழும்பூர் தொகுதியில் குடிசையில் இருந்த மக்களுக்கு திமுக தான் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் அமைத்து கொடுத்தது. தொடர்ந்து மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன், என்றார். செல்லும் இடமெங்கும் மக்கள் அவரை மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

Tags : Barandaman , People's demand, Barandaman campaign
× RELATED பொதுமக்கள் வசதிக்காக சூளை வழியாக...