×

முதியவரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே முதியவரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பஞ்செட்டி ஒட்டி உள்ள அமிர்தாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன்(60). அதே பகுதியில் உள்ள தனியார் குடேனில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை பொன்னேரி பகுதியை  சேர்ந்த பாரதி கண்ணன்(19), ஜெகதீஷ்(21) ஆகியோர் இந்த குடேனில் சென்று குடிபோதையில் கன்னியப்பனிடம் தகராறு செய்தனர். மேலும், அவரை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் இதுகுறித்து கவரப்பேட்டை காவல்  நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் கண்ணன், ஜெகதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags : 2 teenagers arrested for assaulting an elderly man
× RELATED சேலத்தில் வீட்டு பூட்டை உடைத்து...