லக்னோ: சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் அசாம் தவிர்த்து தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி, கேரளாவில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி நேற்று அறிவித்துள்ளார் இது குறித்து லக்னோவில் மாயாவதி கூறுகையில், ‘‘கூட்டணி அமைக்கும்போது எங்களின் வாக்குகள் மற்றவர்களுக்குக் கிடைக்கிறது. ஆனால், கூட்டணி கட்சிகளின் வாக்குகள் எங்களுக்குக் கிடைப்பதில்லை. இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் காரணமாக தனித்தே இனி எல்லா தேர்தல்களிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளோம். அடுத்த ஆண்டு உபியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், 403 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம்’’ என்று அறிவித்துள்ளார்.