×

பாஜவுக்கு நல்ல நாட்கள் வந்தது, மக்களுக்கு வந்ததா?… பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கேள்வி

லக்னோ: நாட்டில் அனைவரும் சேர்ந்து பாஜவுக்கு நல்ல நாட்களை கொண்டு வந்தீர்கள், ஆனால் அவர்கள் கூறிய நல்ல நாட்கள் வாக்குறுதி என்ன ஆனது? என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி இந்தியில் வெளியிட்டுள்ள தனது டிவிட்டர் பதிவில், ‘‘நாட்டில் உள்ள ஏழைகள், வேலையில்லாதவர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் பாஜவுக்கு நல்ல நாட்களை கொண்டு வந்தீர்கள். ஆனால் உங்களுக்காக நல்ல நாட்கள் கொண்டுவரப்படும் என்று அவர்கள் அதிகம் விளம்பரம் செய்த வாக்குறுதி என்ன ஆனது?

காங்கிரஸ் கூறிய வறுமையை அகற்றுவோம் முழக்கத்தை போன்று பாஜவின் நல்ல நாட்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அரசின் அடிப்படை கடமை பகுஜன்களின் வளர்ச்சியை உறுதி செய்வதும் அரசின் கடமையாகும். பிறகு ஏன் கோடிக்கணக்கான ஏழைகள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினரின் வாழ்க்கை தொடர்ந்து பரிதாபமானதாக இருக்கிறது?” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பாஜவுக்கு நல்ல நாட்கள் வந்தது, மக்களுக்கு வந்ததா?… பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Bahujan Samaj ,Mayawati ,BJP ,Bahujan Samaj Party ,Uttar Pradesh ,
× RELATED உ.பி பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய...