×

தமிழகத்தில் கடந்த 16 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது : கமல்ஹாசன்

சென்னை : தமிழகத்தில் கடந்த 16 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  தனது ட்விட்டர் பக்கத்தில்,“தமிழகத்தில் கடந்த 16 நாட்களில் கோவிட் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52% உயர்ந்துள்ளது. தேர்தல் ஆரவாரங்களில் அமுங்கி விடக்கூடாத அபாய எச்சரிக்கை இது.இந்த வேகத்தில் நோய் பரவுவது பேராபத்து. சகல முன்னெச்சரிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு ஒவ்வொரு தமிழரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று எச்சரிகை செய்திருக்கிறார்.


Tags : Tamil Nadu ,Kamalhassan , கமல்ஹாசன்
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...