சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பகத்சிங் காலனி அருகே ஒரு சேரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 குடிசைகள் தீப்பிடித்து எரிந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்து வருகின்றனர். அதிர்ஷ்ட்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு நிலைய அதிகாரி ஜஸ்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.