×

விலை வீழ்ச்சியால் அரூரில் சாலையோரம் கொட்டப்படும் பப்பாளி

அரூர் : அரூரில் விலை வீழ்ச்சியால் சாலையோரம் பப்பாளி பழங்கள் கொட்டப்பட்டு வருகிறது.தர்மபுரி  மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பப்பாளி, பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட  பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இங்கு கிலோ ₹6க்கு வாங்கி ₹20  முதல் விற்பனை செய்து வந்தனர். தற்போது விலை மிகவும் குறைந்து விட்டதுடன்  வெயிலுக்கு பழம் ஒரு நாள் கூட தாங்குவது இல்லை. பறிக்கும் கூலிக்கு கூட  விலை கட்டுப்படியாவது இல்லை என்பதால், சில தோட்டங்களில் பறிக்கப்படாமல்  உள்ளது. மேலும், அழுகிய பழங்கள் சாலையோரம் கொட்டப்பட்டு வருகிறது.

Tags : Aurur , Aroor: Due to the fall in prices in Aroor, papaya fruits are being dumped on the roadsides. Papaya grown in Dharmapuri district is being distributed to areas including Bangalore, Chennai and Coimbatore.
× RELATED அரூர் அருகே சீமை கருவேல மரங்கள் அகற்றம்