சென்னை: அமமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்றும், நாளையும் நேர்காணல் நடைபெறுகிறது. அமமுக சார்பில் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு வினியோகம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. இதுவரை மொத்தம் 5 நாட்களில் 4,191 பேர் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர். புதுச்சேரியில் போட்டியிட 98 பேர் விருப்பமனு பெற்றுள்ளனர். . தலைமை அலுவலகத்தில் இன்று காலை 8 மணிக்கு நேர்காணல் தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது. முதல்நாளான இன்று சென்னை, திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. நாளையுடன் நேர்காணல் முடிவடைகிறது. இதையடுத்து, வரும் 10ம் தேதி வேட்பாளர் பட்டியல்், 11ம் தேதி பிரச்சார விவரத்தை–் டிடிவி.தினகரன் வெளியிட உள்ளார்.