×

தம்பதி, குழந்தையை தாக்கிய வாலிபர்கள் சிறையில் அடைப்பு

பெரம்பூர்: வியாசர்பாடி உதயசூரியன் நகர், 10வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் மதன் (35), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அம்மு (27). கடந்த 14ம் தேதி இரவு மதனின் வீட்டின் அருகே சிலர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர். அப்போது மதன் குடும்பத்தினருக்கும், குடிபோதை கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. இதில் மதன் மற்றும் அவரது மனைவி அம்மு ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களது இரண்டரை வயது ஆண் குழந்தையின் தலையிலும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் அம்மு புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே இந்த வழக்கில் 17 வயது சிறுவனை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த வியாசர்பாடி உதயசூரியன் நகரைச் சேர்ந்த இமானுவேல் (30), சாமுவேல் (34) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். பிறகு வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post தம்பதி, குழந்தையை தாக்கிய வாலிபர்கள் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Madan ,10th block ,Vyasarpadi Udayasuriyan Nagar ,Ammu ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு