×

காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை; குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருக்கிறார். கடந்த மாதம் ஜெயக்குமார் தனக்குக் கொலை மிரட்டல் வருவதாக காவல்துறையில் புகார் அளித்து இருந்ததாக தெரிகிறது. காவல்துறை மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளும் என்று நெல்லை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

இருப்பினும் அவர் முன்னரே அளித்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது காவல்துறையின் மெத்தனப் போக்கைக் காட்டுகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரமாக களப்பணி செய்தவர். இவரது படுகொலை விஷயத்தில் உண்மை குற்றவாளிகள் மிக விரைவாகக் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும்.

The post காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை; குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Congress District ,Jawahirullah ,CHENNAI ,Humanist People's Party ,President Professor ,MH Jawahirullah ,Nellai East District Congress ,President ,KPK ,Jayakumar Thanasingh ,Jayakumar ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்...