சென்னை: 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு 702 பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு வீடியோ கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவப் படையின் 330 கம்பெனிகள் கேட்கப்பட்டுள்ளன.