புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை அலுவலகத்துக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் நிர்வாக சீர்திருத்தத்துறை கூடுதல் செயலாளராக ஜி.மலர்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி வடக்கு மண்டல துணை ஆட்சியராக எம்.கந்தசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிரண்பேடி பதவிக் காலத்தில் பணியாற்றிய அதிகாரிகள் அனைவரும் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.