திருப்பத்தூர்: திருப்பத்தூர் கவுதம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வானவராயன். இவர் திருப்பத்தூர் மாவட்ட அமமுக மாணவர் அணி செயலாளராக உள்ளார். மேலும் இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை வானவராயன், பணவசூலுக்கு வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டார். வசூல் முடிந்து, பூங்காவனத்தம்மன் கோயில் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த 4 பேர், அவரை மறித்து தகராறு செய்தனர். பின்னர் அவர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மிரட்டினர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வானவராயனை ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றது. அந்த கும்பலே தற்போது கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட வானவராயனுக்கு கடந்த 8 மாதத்துக்கு முன் திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.