×

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மார்ச் 15-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி

சென்னை: குரூப்-1 முதல்நிலை தேர்வில் தற்காலிகமாக தேர்வான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மார்ச் 15-ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. முதல்நிலை எழுத்து தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மை தேர்வுக்கான தேர்வு கட்டணம் ரூ.200-ஐ டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு மார்ச் 15-ந் தேதிக்கு முன்னர் கண்டிப்பாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Tags : Applicants , Applicants must upload certificates by March 15: TNPSC
× RELATED பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை 1,249 பேர் எழுதினர்