சென்னை: காஞ்சிபுரம் அருகே காட்ரம்பாக்கம் பகுதியில் விஷவாயு தாக்கி 3 பேர் இறந்த செய்தியறிந்து வேதனை அடைந்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். விஷவாயு கசிவு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.