சென்னை: மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் கலால் வரியை குறைக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதேபோல் விற்பனை வரியை குறைக்க தமிழக அரசும் முன் வர வேண்டும் என கூறினார்