டெல்லி: பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என மாநில அரசுகள் இயற்றிய சட்டத்திற்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என்று சட்டம் இயற்றிய பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.