×

மதரீதியாக தமிழரை பிரிக்க நடந்த சதி உடைந்தது : திருமுருகன் காந்தி ட்வீட்

சென்னை : மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழீழத்தில் நடந்த எழுச்சி பல்வேறு நம்பிக்கைக் கதவுகளை திறந்திருக்கிறது. தமிழர் எதிர்ப்பு ஊடகமான தி இந்து நாளிதழே சிறு செய்தி வெளியிடுமளவிற்கு எழுச்சியை பெற்றிருக்கிறது. மதரீதியாக தமிழரை பிரிக்க நடந்த சதி உடைந்தது. பேரணியில் இசுலாமியர், மலையகத்தமிழர் உள்ளிட்ட அனைத்து தமிழர் கோரிக்கைகளையும் ஒன்றிணைத்த போராட்டமாக பேரணி அமைந்தது.

இலங்கை அரசை நிராகரித்தல், இராணுவத்தை வெளியேற்றல் என தமிழர்தாயக அரசியல் அனைவரையும் எழுச்சிகொள்ளச் செய்திருக்கிறது. தமிழ் இசுலாமியரை ஒதுக்கி சிங்களம் ஆக்கிரமித்த அம்பாரையிலிருந்து முழக்கம் வலுவாகியிருக்கிறது.ஆயிரக்கணக்கில் இராணுவம் ஆக்கிரமித்த போதிலும், உளவுத்துறை மிரட்டல்களுக்கு அஞ்சாமல் திரண்டெழுந்த தமிழீழத் தமிழருக்கு மே17 இயக்கத்தின் புரட்சிகர வாழ்த்துகள், எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Tamils ,Thirumurugan Gandhi , திருமுருகன் காந்தி
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!