திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம் மேல்மணம்பேடு ஊராட்சியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் தங்கராஜ், அவரது தம்பி வெங்கட்ராமன் ஆகியோர் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஏற்கனவே கொலை செய்யப்பட்ட நிலையில், இரு நாட்களுக்கு முன் தங்கராஜின் மைத்துனரான கருணாகரன்(45) தனது வீட்டின் வெளியே நின்றிருந்தபோது அவ்வழியாக கார் மற்றும் பைக்குகளில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்நிலையில், வெள்ளவேடு விஸ்வா(எ)விமல்(19), தமிழ்ச்செல்வன்(20), திருமழிசை சரவணன்(20), அஸ்வின்குமார்(23), திருவள்ளூர் இளமுருகன்(22) ஆகியோர் இரு நாட்களுக்கு முன் மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான மேல்மணம்பேடு ராஜேஷ்குமார்(32) குடியாத்தம் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வெள்ளவேடு போலீசார் முடிவு செய்துள்ளனர்.