பெரம்பலூர்,மார்ச் 13: பெரம்பலூர், அரியலூர் மாவட்ட வனத்துறை சார்பாக அனைத்து நிலை களப்பணியாளர்களுக்கும், வனக்குற்றங்களை கையாளுவது குறித்த ஒருநாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மற்றும் அரியலூர் வனக்கோட்டங்களைச் சேர்ந்த அனைத்து நிலை களப்பணியாளர்களுக்கும் பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின் பேரில், பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூ ரியின் கூட்டஅரங்கில், வனக்குற்றங்களை கையாளுவது குறித்த ஒருநாள் சிறப்பு ப் பயிற்சி அளிக்கப்பட்டது. வனச் சரகர்கள் பெரம்ப லூர் பழனிக்குமரன், (அரியலூர்) முத்துமணி, (வேப்பந்தட்டை) மாதேஷ்வரன், (டேப்ரேஞ்ச்) சத்யா, சமூகக்காடுகள் (பெரம்பலூர்) சுப்ரமணி, (அரியலூர்)குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் (அரியலூர் மாவட்ட கூடுதல் பொறுப்பு) குகனேஷ் தலைமை வகித்து பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.ஓய்வுபெற்ற வனச்சரக அலுவலர் சுப்பையா மற்றும் வனச்சரக அலுவலர் நெல் லை நாயகம் ஆகிய இருவ ரும் சேர்ந்து, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை ச்சேர்ந்த களப்பணியாளர் களான வனவர்கள், வனக் காப்பாளர்கள், வனக்காவ லர்களுக்கு, 1882 வனச்சட்டம் குறித்தும், வன உயிரினங்கள் சட்டம் 1972 குறித் தும், பட்டியலின மரங்கள், பட்டியல் அல்லாதமரங்கள், காப்புக்காடுகள் சம்பந்தப் பட்ட வழக்குகள், பட்டாநில ங்கள்மற்றும் புறம்போக்கு நிலங்களில் நடைபெறும் வனக்குற்றங்கள் குறித் தும், நீதிமன்ற நடைமுறை கள் குறித்தும் வனத்துறையில் பணியாற்றிய அதிகா ரிகள் சந்தித்த பிரச்சனை கள் குறித்தும்நீதிமன்ற வழ க்குகளில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தையும் தெளிவா னமுறையில் விளக்கிக் கூறினர். காலை 9மணிக்குத் தொடங்கி மாலை 7மணி வரை என சுமார் 10மணி நேரம் நடைபெற்ற இப்பயிற்சி, வனத்துறையைச் சேர்ந்த அனைத்துப் பணியாளர்க ளுக்கும் மிகுந்த மனநிறைவை வழங்கியதாக அனை த்து பணியாளர்களும் மகிழ்வுடன் தெரிவித்தனர். மேலும் நமது சக பணியாளர்கள் தற்சமயம் சந்தித்து வரும் அனைத்து நடைமுறை சிக்கல்களையும் கேள்விகள் கேட்க வைத்து தெளிவான விளக்கங்களையும் அளித்தனர். இப்படி ஒரு அருமையான பயிற்சியை வழங்கிய ஓய்வுபெற்ற வன ச்சரக அலுவலர் சுப்பையா, வனச்சரக அலுவலர் நெல்லை நாயகத்திற்கும், மேலும் பயிற்சிக்கு தலைமை தாங்கி காலையில் இருந்து இரவு 7மணி வரை உடனிருந்து பயிற்சியை நடத்தி கொடுத்த பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் தூர்ந்து போய் கிடக்கின்றன. இதனால் மழை பெய்யும் காலங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் மழைநீர் உரிய வழியில் பயன்படாமல் வீணாகும் நிலை உள்ளது. மேலும் மழைநீரை ஏரியில் சேகரிக்க முடியாததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது….
The post அனைத்து நிலை களப்பணியாளர்களுக்கு வனக்குற்றங்களை கையாளுவது குறித்த பயிற்சி appeared first on Dinakaran. | அனைத்து நிலை களப்பணியாளர்களுக்கு வனக்குற்றங்களை கையாளுவது குறித்த பயிற்சி | Dinakaran
×
அனைத்து நிலை களப்பணியாளர்களுக்கு வனக்குற்றங்களை கையாளுவது குறித்த பயிற்சி
05:35 am Mar 13, 2023 |
Tags : Perambalur ,Ariyalur District Forest Department ,Ariyalur Forest Divisions ,Forest ,Officer ,Perambalur Guganesh ,Perambalur Palanikumaran ,Ariyalur ,Muthumani ,Vepanthatta ,Matheswaran ,Tabrange ,Sathya ,Community Forests ,Subramani ,Gunasekaran ,District ,Forest Officer ,Ariyalur District ,Kuganesh ,Subbiah ,Nel Lai Nayakam ,Ariyalur Districts ,Subpaiah ,Nellai Nayak ,Perambalur District ,Dinakaran ,