டெல்லி: இலங்கையில் உள்ள 12 இந்திய மீனவர்களை விடுவிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என மாநிலங்களவையில் வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம் அளித்தார். 62 மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படை வசம் உள்ளன எனவும் கூறினார். மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை இந்திய தூதரகம் வழங்கி வருகிறது என தெரிவித்தார்.