டெல்லி: டெல்லி-உ.பி. எல்லையில் காசிப்பூரில் போராடும் விவசாயிகளை தமிழக எம்.பி.கள் சந்திக்கின்றனர். கனிமொழி,திருச்சி சிவா,திருமாவளவன்,ரவிக்குமார், சு.வெங்கடேசன், உள்ளிட்டோர் விவசாயிகளை சந்திக்க பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் மல்லிகார்ஜுன கார்கே, அர்சிம்ரத் கவுர் பாதல் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும் விவசாயிகளை சந்திக்கின்றனர்.