×

மொழி, இனம், நாடு காக்கும் உரிமை உணர்வு கொண்ட அண்ணாவின் ஆட்சியை மூன்று மாதங்களில் அமைப்போம்: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: இன்று 52-வது பேரறஞ்ர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னை வாலாஜா சாலையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மொழி, இனம், நாடு காக்கும் உரிமை உணர்வு கொண்ட அண்ணாவின் ஆட்சியை மூன்று மாதங்களில் அமைப்போம் என உறுதியேற்கிறோம் இன்று என கூறினார்.

தந்தை பெரியாரின் தனயன் முத்தமிழறிஞர் கலைஞரின், தாய்த் தமிழ்நாட்டின் அண்ணன் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள் இன்று என அறிக்கையில் குறிப்பிட்டார். மேலும் இந்த அமைதிப் பேரணியில் கட்சி நிர்வாகிகள், திமுக எம்.எல்.ஏக்கள், கட்சி பொருப்பாளர்கள் என பலர் கலந்துக் கொண்டனர். ஆட்சியில் இல்லாமலேயே மக்கள் பணி மேற்கொள்ளும் திமுக ஆட்சிக்கு வந்தால் மேலும் சிறப்பாக செயல்படும் என கூறினார்.


Tags : Anna ,country ,Stalin ,race , Anna's rule, in three months, will set, Stalin
× RELATED அண்ணா அறிவியல் மைய கோளரங்கில் பள்ளி...