×

கோவை, ஈரோடு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கோவை, ஈரோடு, நீலகிரி, நெல்லை, கரூர், சேலம், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசி இதமான சூழல் நிலவி வருகிறது. தென் மாவட்டங்களில் திடீர் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையில் இன்று முதல் 17ம் தேதி வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோவை, ஈரோடு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Goa ,Erode ,Meteorological Survey Center ,Chennai ,Neelgiri ,Nella ,Karur ,Salem ,Trichy ,Namakkal ,Chennai Meteorological Centre ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸிற்கு...