×

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு

சென்னை: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் ஆபரேஷன் ஸ்மைல்   என்ற தலைப்பில் சென்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலையத்தில் தொடர்ந்து 15 நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. முதல் நாளான  நேற்று ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில்   அதிகாரிகள், காணாமல் போன மற்றும் பெற்றோரை பிரிந்துள்ள குழந்தைகளை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்கும் சிறப்பு நடவடிக்கை  பற்றி ரயில் பயணிகள் மற்றும்  ரயில்வே ஊழியர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் வழங்கினர்.


Tags : children , Awareness of violence against children
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...