சென்னை: நாளை முதல் மீண்டும் யூ.டி.எஸ். செயலி மூலம் சென்னை புறநகர் ரயில்களுக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புறநகர் ரயில்களுக்காக டிக்கெட் வழங்கும் போது ஏற்படும் நெரிசலை குறைக்க யூ.டி.எஸ். செயலி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யூ.டி.எஸ்.செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் முறை மீண்டும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.