×

பச்சோந்திகளை பத்தி விட்டுட்டு, சசிகலா அதிமுகவை பிடிப்பார்! – நமது எம்ஜிஆர் நாளேடு விமர்சனம்!

சென்னை : ஆணைகளை உடைத்தெறிந்து சசிகலாவை ஒன்றுகூடி வரவேற்போம் என்று அதிமுக - அமமுக இணைப்பிற்கு நமது எம்ஜிஆர் நாளேடு மறைமுக அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ள சசிகலா சென்னை திரும்பும் போது, ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் சென்னை திரும்புவது தாமதம் ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது. நமது எம்ஜிஆர் வெளியிட்டுள்ள கட்டுரையில், எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவின் கட்டி காக்கப்பட்ட இயக்கத்தை ஒரு தனி மனிதனுக்கு திடீரென ஏற்பட்ட பதவி வெறியால் சிதைக்க நினைக்காதே என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோடான கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம் பதவி வெறியால் சிதறுண்டு போக வேண்டுமா ?சுயமான சிந்தனை செய்!தீர்க்கமான, தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவினை எடு என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆணைகளை உடைத்தெறிந்து ஒரு சேர சசிகலாவை வரவேற்போம் என்றும் நமது எம்ஜிஆர் நாளேடு அழைப்பு விடுத்துள்ளது. ஜெயலலிதாவின் விசுவாச தொண்டர்கள் இருவரும் உரையாடல் பாணியில் எழுதப்பட்டுள்ள அந்த கட்டுரையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சியை காப்பாற்றி முதலமைச்சர் பதவியை தக்கவைத்து தந்திட்ட தலைவியை 100 % கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று மனசாட்சியை விட்டுவிட்டு நன்றி கெட்ட மனிதராக வலம் வருபவர்களால் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைக்க முடியாது என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்யும் துரோகிகளுக்கு இனி சரித்திரத்தில் பச்சோந்திகள் நம்பிக்கை துரோகிகள் என்ற அடையாளம் மட்டுமே வரலாறாகவே பேசபடுமே தவிர ஜெயலலிதா தொண்டர்களை காத்திட முடியாது என்பதே உண்மை என்று நமது எம்ஜிஆர் நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 


Tags : superhero ,Sasikala , Chameleon, Sasikala, AIADMK, Our MGR, Daily
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!