டெல்லி: இந்தாண்டு பொருளாதார ஆய்வறிக்கை கொரோனா எதிர்ப்பு முன்கள போராளிகளுக்கு சமர்ப்பணம் என சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொது முடக்கத்தை அமல்படுத்தியதால் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது என நிதியமைச்சக பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் மற்ற நாடுகளை விட இந்தியர்களை எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. இனி உற்பத்தி, சேவைத்துறைகள் வேகமாக வளர்ச்சி பெறும். பொருளாதார மந்த நிலையில் இருந்து இந்தியா வேகமாக மீள்கிறது என குறிப்பிட்டார்.