×

கார் மோதி பெண் பலி

திருப்பூர், பிப். 3: திருப்பூர் மண்ணரை கோல்டன் நகர் மெயின் ரோடு ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் முகமது ரபிக். இவரது மனைவி தஸ்லிமா பானு(30). இவர் அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில்31 ஆம் தேதிபால் வியாபாரத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். திருப்பூர் சாலையில் வெள்ளியம்பாளையம் லோட்டஸ் நகர் பகுதி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் இருசக்கரவாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தஸ்லிமா பானு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த தகவலின்பேரில் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Car collision ,
× RELATED மின் கம்பத்தில் கார் மோதல் 2 பேர் கருகி பலி