×

காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி எடுத்து சென்ற தனியார் துறைமுக நிர்வாகத்திற்கு ஆட்சியர் எச்சரிக்கை..!!

புதுச்சேரி: காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி எடுத்து சென்ற தனியார் துறைமுக நிர்வாகத்திற்கு ஆட்சியர் மணிகண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிலக்கரி ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதே விபத்துக்கு காரணம். கூடுதல் நிலக்கரி ஏற்றிச் செல்வது, பாதுகாப்பின்றி எடுத்துச் செல்வதைத் தடுக்க வேண்டும். நிலக்கரி ஏற்றிச் செல்லும் வாகனங்களை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். சாலையில் சிதறிக் கிடந்த நிலக்கரியில் சிக்கி ஒரே நாளில் 7 விபத்துகள் நடந்த நிலையில் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி எடுத்து சென்ற தனியார் துறைமுக நிர்வாகத்திற்கு ஆட்சியர் எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Ruler ,Karaikal ,Ruler Manikandan ,Dinakaran ,
× RELATED 1 மணி நேரத்திற்குள் தொழில்நுட்ப...