சென்னை: அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் அம்மையார் மருத்துவர் சாந்தா அவர்கள் தனது இறுதிக்காலம் வரை மக்கள் தொண்டாற்றியவர். மகசேசே, பத்மபூஷன், பத்மவிபூஷன் என விருதுகள் பலவற்றைப் பெற்று மருத்துவத்துறையில் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர். அவரது மறைவு மருத்துவ உலகிற்கு பேரிழப்பு என குறிப்பிட்டுள்ளார்.