சென்னை: அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா உடலுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் வி.சாந்தா உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் மருத்துவர் சாந்தா எனவும் குறிப்பிட்டுள்ளார்.