சென்னை: தலைவி திரைப்படம், குயின் இணையதள தொடருக்கு தடை கோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கின் விசாரணையை வருகின்ற 22ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. குயின் தொடரில் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக ஜெயலலிதா சட்டபூர்வ வாரிசு தீபா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.