சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. நேற்று முன் தினம் மாட்டுப் பொங்கல் என்பதால் பொதுமக்கள் யாரும் ஏரி பகுதிக்கு செல்லவில்லை. இதனால் டால்பின் கரை ஒதுங்கியதை எவரும் கவனிக்கவில்லை. இதை நேற்று அப்பகுதி மக்கள் கூட்டம் கூடமாக சென்று பார்த்தனர்.