சென்னை: திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கை விதியை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கலின்போது மெரினாவில் மக்கள் கூடாமல் தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். காணும் பொங்கலன்று மக்கள் பொது இடங்களில் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.