×

திமுகவில் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி உருவாக்கம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை : வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி என்ற புதிய அணி திமுகவில் உருவாக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, துரைமுருகன் இன்று (ஜன. 08) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

திமுக சட்டதிட்ட விதி: 6, பிரிவு: 2-ன் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை திமுக உறுப்பினராக இணைப்பதற்கும் ஒவ்வொரு நாட்டிலும், திமுக அமைப்புகளை உருவாக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் திமுக சட்டதிட்ட விதி 31 - பிரிவு: 20-ன் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ) நல அணி என்ற புதிய அணி அமைக்கப்படுகிறது.

அணிச் செயலாளர்: டி.ஆர்.பி.ராஜா, எம்எல்ஏ

இணைச் செயலாளர்கள்: செந்தில்குமார், எம்.பி.,

புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Tags : Overseas Indian Welfare Team ,DMK ,Thuraimurugan Announcement , DMK, Overseas Indians, Welfare Team, Formation, Thuraimurugan
× RELATED நகர திமுக அலுவலகம் திறப்பு