சென்னை: தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் தொழுகை நடத்த பயன்படுத்தப்படும் கட்டிட வாடகைதாரரை வெளியேற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எதிரி சொத்து பாதுகாப்பு சட்டத்தின் கீழான சொத்தில் துணி வியாபாரம் செய்து வரும் பாபு இஸ்மாயில் சாகிப் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. சட்டவிதிகளை பின்பற்றாமல் உடனடியாக காலி செய்யும் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. எதிரி சொத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி, சென்னை ஆட்சியர், புரசைவாக்கம் வட்டாட்சியர் பிப்ரவரி 5க்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.