×

ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை பெற்றார் இலங்கை அணி வீரர்

துபாய்: ஐசிசியின் 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை பெற்றார் இலங்கை அணி வீரர் கமிந்து மென்டிஸ் பெற்றார்.

மார்ச் 2024க்கான ஐசிசி ஆண்களுக்கான சிறந்த வீரர் அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வெல்வதற்காக அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் அடேர், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி மற்றும் கமிந்து மென்டிஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் சிறந்த வீரருக்கான விருதை கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார்.

பிரபாத் ஜயசூரிய மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோருக்குப் பிறகு ஆடவர் பரிசை வென்ற மூன்றாவது இலங்கை அணி வீரர் என்ற பெருமையை கமிந்து மெண்டிஸ் பெற்றார். இந்த விருதை சர்வதேச கிரிக்கெட்டில் தனது எதிர்காலத்திற்கான உத்வேகமாக மெண்டிஸ் பார்க்கிறார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;

“இந்த மாதத்தின் ஐசிசி ஆடவர் வீரராக நான் தேர்வு செய்யப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இது எனது சர்வதேச வாழ்க்கைக்கு ஒரு உத்வேகமாக நான் கருதுகிறேன். இது போன்ற ஒரு அங்கீகாரம், அணி, நாடு மற்றும் ரசிகர்களுக்கு நடுவில் வழங்குவதற்கு வீரர்களாகிய எங்களை மேலும் மேலும் உழைக்கச் செய்கிறது.

என்னுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற இரண்டு வீரர்களான மார்க் அடேர் மற்றும் மாட் ஹென்றி ஆகியோருக்கும் நான் சிறந்த வீரர்கள் மற்றும் நல்ல போட்டியாளர்களாக கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை பெற்றார் இலங்கை அணி வீரர் appeared first on Dinakaran.

Tags : Dubai ,Kamindu Mendis ,Ireland ,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...