நெல்லை: நெல்லை மணிமுத்தாறு அணையில் இருந்து மறைமுக பாசனப் பரப்புகளுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பிரதான கால்வாயின் 1,2வது ரீச்சுகளின் வழியாக பாசன பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். ஜனவரி 12ம் தேதி முதல் மார்ச் 31 வரை தண்ணீர் திறப்பதன் மூலம் 11,134 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.