×

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஜூலை மாதம் வரை நடத்தப்படும் பண்டிகைகள் குறித்து அறிக்கை

சென்னை: கொரோனா பரவல் காரணமாக கோயில்கள் மூடப்பட்டதால், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடத்தப்பட வேண்டிய விழாக்கள், பண்டிகைகளை நடத்துவது குறித்து, மத தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து முடிவெடுக்கக் கோரி, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத விவகாரங்களில் தலையிட அரசுக்கு உரிமையில்லை. ஆகம விதிகளின்படி விழாக்களை நடத்த வேண்டும் என்று மனுதாரர் ரங்கராஜன் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மத உரிமை, பொது நலனை விட வாழ்வுரிமை உயர்ந்தது. வாழ்வுரிமை முக்கியமானது.  வாழ்வுரிமையை கருதி அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் தலையிட முடியாது. அதேசமயம், வரும் ஜூலை வரை ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்க உள்ள விழாக்கள், பண்டிகைகள் எப்படி நடத்துவது என்பது குறித்து, மத தலைவர்களுடன் கலந்து பேசி 6  வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் கொரோனா தடுப்பு விதிகளில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்று  இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டார்.

Tags : festivals ,Srirangam Ranganathar Temple , Srirangam Temple, Festivals, Report
× RELATED கோயில் தேர் திருவிழாவில் அசம்பாவிதம்...