×

மதுபோதையில் ஆபாசமாக பேசியதால் ஆத்திரம்: வாலிபர் தலையை கான்கிரீட் கல்லால் நசுக்கி படுகொலை: ரவுடி உட்பட 2 பேர் கைது

சென்னை: குடிபோதையில் ஆபாசமாக பேசியதால் ஆத்திரமடைந்த ரவுடி தனது நண்பருடன் சேர்ந்து வாலிபரை கான்கிரீட் கல்லால் நசுக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்தவர் செந்தில்(36). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு  பாண்டிபஜார் கிருஷ்ணசாமி தெருவில் உள்ள டாஸ்மாக் பாரில் செந்தில் அவரது நண்பரான ரவுடி சொரி சுரேஷ், அசோகன் ஆகியோருடன் மது அருந்து கொண்டிருந்தார்.

அப்போது, போதை தலைக்கேறியதும் செந்தில், சொரி சுரேஷ் குறித்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் செந்திலுக்கும், சொரி சுரேசுக்கும் இடையே கடும் வாய் தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த பாரில் இருந்த ஊழியர்கள் அவர்களை வெளியேற்றியுள்ளனர். பின்னர் கிருஷ்ணசாமி தெருவில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரமடைந்த சொரி சுரேஷ் தனது நண்பர் அசோகனுடன் சேர்ந்து செந்திலை கடுமையாக தாக்கினர். அப்போதும் ஆத்திரம் தீராத சொரி சுரேஷ் சாலையோரம் இருந்த கான்கிரீட் கல்லை எடுத்த செந்தில் தலையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த செந்திலை மீண்டும் சொரி சுரேஷ் மற்றும் அசோகன் ஆகியோர் கல்லால் தலையை நசுக்கி படுகொலை செய்தனர். தகவலறிந்த பாண்டி பஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் போதையில் இருந்த கோடம்பாக்க்ததை சேர்ந்த ரவுடி சொரி சுரேஷ்(36), தேனாம்ேபட்டையை சேர்ந்த அசோகன்(26) ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பாண்டி பஜாரில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : head ,Walipar ,Rowdy , Chennai, alcoholism, murder, arrest
× RELATED ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு பிரசாரம்