×

ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு பிரசாரம்

தர்மபுரி, ஏப்.11: பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்கு அளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் ரங்கோலி வண்ணக் கோலமிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ‘நம் ஓட்டு, நம் உரிமை’ என்னும் உறுதிமொழி ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி தலைமையில் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் கனிமொழி, குழந்தைகள் நல மருத்துவர் பிரபா, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

The post ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Rangoli ,Dharmapuri ,Bennagaram Government District Head Hospital ,Dinakaran ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி