×

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு யாரும் வரவேண்டாம்: துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வேண்டுகோள்

புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு யாரும் வரவேண்டாம்; கொரோனா பரவலின் ஒரு பகுதியாக ஆகி விட வேண்டாம் என துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டம் உண்டு என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்த நிலையில் ஆளுநர் கிரண்பேடி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். புத்தாண்டை குடும்பத்துடன் வீட்டிலிருந்து கொண்டாடுங்கள்; புத்தாண்டு கொண்டாட்டங்கள் எங்கும் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறினார்.


Tags : No one ,Kiranpedi ,states ,Tamil Nadu ,Puducherry , No one from Tamil Nadu and other states should come to Puducherry: Request from Deputy Governor Kiranpedi
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...